சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் லக்ஷயா சென் மற்றும் பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறினர்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இதில், இந்திய வீரர் லக்ஷயா சென், சக்கி வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். பிரியான்ஷு ரஜாவத் வியட்நாம் வீரர் டாங் நுயெனுடன் மோதியபோது 21-13, 21-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.