சட்டசபையில் ரூபாய் 2893 கோடி நிதி ஒதுக்குவதற்கான முதல் துணை நிலை மதிப்பீடு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் துணை நிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புது பணிகள் மற்றும் புது துணை பணிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு, எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்க படுவதே துணை நிலை பட்ஜெட் தாக்கல் நோக்கமாகும்.
இதில் மாநில பேரிடர் தனிப்பு நிதியின் கீழ் மழைநீர் வடிவால் அமைக்க ரூபாய் 304 கோடியும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பங்கு மூலதன நிதியாக ரூபாய் 174. 33 கோடியும், விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூபாய் 181.40 கோடியும், அடையாறு கூவம் சீரமைப்பு திட்டத்திற்காக ரூபாய் 150 கோடியும், அரசு போக்குவரத்து நிறுவனங்களில் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்காக மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு முன் பணமாக ரூபாய் 171.5 கோடியும் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உணவு தானியங்களை கையாளுதல் மற்றும் விநியோகித்தல், ரேஷன் கடைகள் மற்றும் முகவர்களுக்கு லாபம் ஆகியவற்றிற்காக மத்திய மற்றும் மாநில அரசின் பங்காக ரூபாய் 511.84 கோடியும் அரசு அனுமதித்துள்ளது. மேலும் 46 அரசு பல்தொழில் நுட்ப கல்லூரிகளில் தரம் உயர்த்துவதற்கு ரூபாய் 277.64 கோடி ரூபாய் அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்காக ரூபாய் 150 கோடி உயர் கல்வித் துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதி தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறு நிதி ஒதுக்கத்திற்கு செலவிடப்பட உள்ளது. அடையாறு நதி மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 139.14 கோடி அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது.