தைவான் தொழிற்சாலை தீ விபத்தில் விதிமீறல் காரணமாக அந்த தொழிற்சாலைக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதித்தது தைவான் அரசு.
தைவானின் பிங்டன் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. அந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவி முழு கட்டிடமும் தரைமட்டமானது. இந்த தகவலை அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் நான்கு தீயணைப்பு வீரர்கள் உட்பட 9, 10பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த தொழிற்சாலையில் ஆர்கானிக் பெராக்ஸைட் என்ற அபாயகரமான வேதிப்பொருளை அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 டன் மட்டுமே வைக்க வேண்டிய வேதிப்பொருளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுமார் 3000 டன் அளவுக்கு சேமித்து வைத்திருந்தனர். இது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. அதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு சுமார் 62 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.














