போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழக இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மீண்டும் இது தொடர்பான பேச்சு வார்த்தை அடுத்த மாதம் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு பிப்ரவரி 6ஆம் தேதி வர உள்ள நிலையில் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தின் தெரிவித்துள்ளனர்.