மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளசாரயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை அடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் […]

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளசாரயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை அடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் மதுவிலக்கு திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர். என் ரவி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கள்ளச்சாராயம் தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu