தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
இதுகுறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் மாதம் தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி.,வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது 2021 செப்டம்பரில் வசூலான 7,842 கோடி ரூபாயை விட 10 சதவீதம் அதிகம்.
ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில் தமிழகம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாத வரி வருவாய் 160 கோடியில் இருந்து 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 188 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.