தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளீட்டு விழா நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தொழில் துறையில் தமிழகம் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருகிறது. உயர் கல்வியிலும் தொழிற்திறனிலும் சிறந்து விளங்குகிறது. 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது.
ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க திட்டமிட்டுள்ளோம். 15 மாத காலமாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கி செல்கிறது. மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான, விமானிகளாக உலகை வலம் வர இயலும் என்று அவர் பேசினார்.