தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அதனை முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. மேலும் சனிக்கிழமைகளில் இருந்து நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூட இருக்கின்றது. அங்கு தமிழக அரசு தண்ணீர் திறந்து விடாததால் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் அங்கு குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் போதுமானதாக இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. குடிநீருக்கு தண்ணீர் வைக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.














