தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நேற்று 36வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுயசார்பு இந்தியாவை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. சுதந்திர போராட்டக் காலத்தில் சுதேசி இயக்கம் தமிழ்நாட்டிலிருந்து தோன்றியது. தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் பேசினார்.