யு.பி.எஸ்.சி.தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 25000 ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன. இதற்கு 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குடிமைப் பணிகள் தேர்விற்காக படித்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் படி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.25000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 07.08.2023 அன்று தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாணவர்களுக்கு தலா ரூ. 25000 ரூபாய்க்கான காசாலைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அவர்களுக்கான ஊக்கத்தொகையை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.