ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய 137 தமிழக பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர்.
அவர்களை வரவேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு சென்றார் . அப்போது பேட்டியளித்த அவர் 137 பேரில் 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார். மேலும் காயமடைந்த , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் கூறினார்.