தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது.
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியில் 'ஹிந்தி மாதம்' என்ற நிகழ்ச்சி நேற்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி தவறவிடப்பட்டதால், அதற்கான சர்ச்சை உருவானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், டிடி தமிழ் தொலைக்காட்சி குளறுபடியுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அவர்கள் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்க வேண்டும் என்பதற்கான எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை" என்று கூறியுள்ளனர்.