லஞ்சம் கொடுத்த விவகாரம் - டிசிஎஸ் நிறுவனத்தில் 6 பேர் பணி நீக்கம்

June 30, 2023

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன், டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் கொடுத்தது மற்றும் மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நிகழ்வில் பேசிய அவர், “டி சி எஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாமல், பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6 ஊழியர்கள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது […]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன், டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் கொடுத்தது மற்றும் மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நிகழ்வில் பேசிய அவர், “டி சி எஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாமல், பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6 ஊழியர்கள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன; மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். ஆனால், இது தொடர்பான விரிவான விவரங்களை அவர் அறிவிக்கவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசிஎஸ் ஒழுங்கு முறைகளை பின்பற்றாத பல பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடியின் மொத்த மதிப்பு 100 கோடி ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu