டாடா குழுமம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள தனது உற்பத்தி மற்றும் அசெம்பிளி ஆலைகளுக்கு 4,000 பெண் தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்கவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு, தேசிய தொழிற்பயிற்சித் திட்டம் (NATS) மற்றும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும்.
ஓசூர் மற்றும் கோலாரில் உள்ள டாடா குழும ஆலைகளில் பணியாற்ற ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ டிப்ளமோ பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த முயற்சி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி மேற்கொண்டு வரும் வேலைவாய்ப்பு முயற்சிகளை ஆதரிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு திறமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அமைகிறது.