2025 ஆம் நிதி ஆண்டுக்கு தனது தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த முதலீட்டு நிதி 43000 கோடி ரூபாய் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் இது 41200 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மொத்த முதலீட்டுத் தொகையில் 35000 கோடியை ஜாகுவார் லேண்ட்ரோவர் வழங்குகிறது. கடந்த வருடமும் பெரும் பங்கு முதலீடு ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தால் கையாளப்பட்டது. கடந்த வருடம் 33000 கோடியை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும், 8000 கோடியை டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் முதலீடு செய்தன. இந்த வருடம், ஜாகுவார் லேண்ட்ரோவர் தனது முதலீட்டை 6% அளவுக்கு அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் சார்பில் முந்தைய ஆண்டின் அளவிலான முதலீடு நீட்டிக்கப்படுகிறது.