சீன ஸ்மார்ட்போன் நிறுவனரான விவோவின் இந்திய வர்த்தகத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து டாடா குழுமம் விலகியுள்ளது. இந்த முடிவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சீன நிறுவனங்கள் தங்கள் இந்திய கிளைகளை "இந்தியமயமாக்குவதற்கான" நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, விவோ நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் 51% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. இதை டாடா குழுமம் வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. டாடா குழுமத்தின் பெங்களூரு ஆலைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விவோ பங்குகளை வாங்குவதன் மூலம், டாடா குழுமம் தங்களது போட்டியாளருடன் இணைவது ஆப்பிள் நிறுவனத்திற்கு விருப்பமில்லை எனக் கருதப்படுகிறது. எனவே, விவோவின் இந்திய வர்த்தகத்தை வாங்கும் திட்டத்தை டாடா குழுமம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.