நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் - மத்திய அரசு

November 24, 2022

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து , மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டில், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி என நேரடி வரிகள் மூலம் ரூ.14, 20,000 கோடியும், மறைமுக வரிகள் (சுங்கவரி, உற்பத்தி வரி, ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.13,30,000 கோடியும் வசூலாகும் என்று பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி. துறை, மத்திய […]

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து , மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டில், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி என நேரடி வரிகள் மூலம் ரூ.14, 20,000 கோடியும், மறைமுக வரிகள் (சுங்கவரி, உற்பத்தி வரி, ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.13,30,000 கோடியும் வசூலாகும் என்று பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி. துறை, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தரவுகளை பார்த்தால், வரிவசூல் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அதன்படி, நேரடி வரிகள் மூலம் ரூ.17, 50,000 கோடி, மறைமுக வரிகள் மூலம் ரூ.14,00,000 கோடி என மொத்தம் ரூ. 31,50,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.4 லட்சம் கோடி அதிகம். பொருளாதாரம் சீரடைந்தது, வரி செலுத்துவோர் தவறாமல் வரி செலுத்தியது உள்ளிட்ட காரணங்களால் வரி வசூல் அதிகரிப்பதாக அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu