இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இஸ்ரேலில் உள்ள பெரு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், போர் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேல் செயல்பாடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற சர்வதேச தகவல் தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.இஸ்ரேல் நாட்டில், மைக்ரோசாப்ட், கூகுள், இன்டெல், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் செயல்பாடுகள் போர் காரணமாக பாதிப்படைந்துள்ளன. போர் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இவற்றின் செயல்பாடுகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இஸ்ரேல் செயல்பாடுகளை ஏற்கும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.