டெக் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இன்போசிஸ் முன்னாள் அதிபர் மோகித் ஜோஷி நியமிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது. இதனை அடுத்து, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. திங்கள் கிழமை வர்த்தக நாளின் போது, கிட்டத்தட்ட 10% வரை உயர்ந்த டெக் மஹிந்திரா பங்குகள், 1164.5 ரூபாய்க்கு வர்த்தகமானது. எனவே, மோகித் ஜோஷியின் வருகை, டெக் மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு பங்கு மதிப்பீட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. குறிப்பாக, “மோகித் ஜோஷியின் வருகையால் டெக் மஹிந்திராவின் வணிக உத்தியில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். இதனால், நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்” என்று பெரும்பான்மையாக கூறப்பட்டுள்ளது.