காஞ்சீபுரம் சிப்காட் பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் தொழிற்சாலையை திறந்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம் காஞ்சீபுரம் சிப்காட் பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் தொழிற்சாலையை திறந்துள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டையில் இத்தாலி மற்றும் இந்தியா நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக எஸ்.ஒ.எல். இந்தியா நிறுவனம் ரூ.175 கோடி முதலீட்டில் காற்று பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளது. இதில் 20 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 6 மாணவர்களுக்கு பயிற்சிக்காக கடிதங்களும் வழங்கப்பட்டன.