தெலுங்கானா மாநில அரசு கோயில் உண்டியல்களில் காணிக்கையாக வரும் பணம் மற்றும் தங்கத்தை பத்திரமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை பணம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களின் மூலம் செலுத்தி வருகின்றனர். இவற்றை பத்திரமாக மாற்ற தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தங்கத்தை மும்பை மின்ட் பகுதியில் உருக்கி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து தகுந்த பத்திரங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலில் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பதற்கு அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இது இனி படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் காணிக்கைகளையும் வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் அதற்கான வட்டியும் கிடைக்கும் வகையில் அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதுவரை 825 கிலோ தங்கம், 39 ஆயிரத்து 783 கிலோ வெள்ளி பொருள்களும் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது சில முக்கிய கோயில்கள் மட்டும் தங்கத்தில் டாலர்கள் செய்து விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெள்ளியை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.