இந்தியாவில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து கைபேசி எண்களை பெறுவோர் அதிகரித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில், கிட்டத்தட்ட 2.25 லட்சம் கைபேசி எண்களை நீக்கி தொலைத்தொடர்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், போலி ஆவணங்களை சரி பார்க்காமல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை வழங்கியதாக 517 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது, இந்த கடைகளில் சிம் கார்டு விற்பனையைத் தடை செய்து தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீக்கப்பட்ட அனைத்து கைபேசி எண்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.