காசாவின் வடக்கு பகுதியில் இருந்த ஒரு பள்ளி ஒன்றில் 10 பாலஸ்தீன பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது பத்து பாலஸ்தீன பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ராணுவ படையினால் கொல்லப்பட்டனர். அதோடு அதே பகுதியில் 10 ஏவுகணைகள் தயார் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை முற்றிலும் அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதோடு மத்திய காசா பகுதியிலும் மேலும் சில பயங்கரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது
வடக்கு காசாவின் பாஷ்டி ஷட்டி பகுதியில் தாக்குதலின் போது ராணுவ ஆயுதங்களும் ஹமாசுக்கு சொந்தமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த காசா போரில் இதுவரை 26,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்கியதலில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் ஹமாசின் கோரிக்கைகளை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.