மணிப்பூரில் மீண்டும் பதற்றம் – இணையத் தடை திடீர் கைது எதிரொலி

அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது மணிப்பூரில் புதிய போராட்டத்தைத் தூண்டியுள்ளது. பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் இம்பாலில், மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் சாலைமறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகும். நிலைமை சீராகும்படி, ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாட்கள் இணைய […]

அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது மணிப்பூரில் புதிய போராட்டத்தைத் தூண்டியுள்ளது. பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் இம்பாலில், மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவரின் கைது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் சாலைமறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகும். நிலைமை சீராகும்படி, ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாட்கள் இணைய சேவை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023இல் தொடங்கிய குக்கி – மெய்தேய் மோதல் பின்னணியில் இந்த பதற்றம் தொடர்ந்து உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu