பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கன் மாகாணத்தில், இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ராணுவ மையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்போடு தொடர்புடைய தீவிரவாத இயக்கமாகும். இந்த தற்கொலை படை தாக்குதலில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலர், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.