தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா செனட் சபையில் நிறைவேறியது.
சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதனை தொடர்ந்து செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 130 பேர் வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினர். நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். கடந்த மார்ச் மாதம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதன் மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. செனட் சபை இந்த மசோதாவை ஆய்வு செய்த பின் அரசியல் அமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பும். அதன் பின் மன்னர் ஒப்புதல் வழங்குவார். அதன் பின்பே சட்டமாக்கப்படும்.