ஏற்காட்டில் 47வது கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதற்காக தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. […]

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதற்காக தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஏற்காட்டில் விளையும் காப்பிரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுவைத்து அந்த காபி ரகங்களை வாங்கிச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர சுற்றுலா துறையின் சார்பில் ஏற்காடு படகு இடத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 வரை பொதுமக்களுக்கு படகு போட்டியும், 23ஆம் தேதி அடுப்பில்லா சமையல் போட்டியும், விளையாட்டு துறையின் சார்பில் 23ஆம் தேதி மான்போர்டு விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எரிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் 25ஆம் தேதி கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26 ஆம் தேதி குழந்தைகளின் தளிர் நடை போட்டியும் நடத்தப்பட உள்ளது. மேலும் சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டு துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு
கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu