சென்னையில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்த புள்ளிகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்கப்படுகின்றன. ரூ.1,543 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளன. வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்த புள்ளிகளை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.