கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்பு

December 23, 2023

கோவில்பட்டி நகரில் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. கோவில்பட்டியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கோவில்பட்டி நகரில் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்து தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆன தீப்பெட்டி பண்டல்கள் வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டிக்கு தேவையான அல்சிசயா என்ற […]

கோவில்பட்டி நகரில் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது.

கோவில்பட்டியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கோவில்பட்டி நகரில் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்து தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பில் ஆன தீப்பெட்டி பண்டல்கள் வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டிக்கு தேவையான அல்சிசயா என்ற வெள்ளை குச்சி மரங்கள் மலேசியா,சிங்கப்பூர், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவில்பட்டிக்கு கொண்டு வரப்படும். தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கு காரணமாக கோவில்பட்டிக்கு கொண்டுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டக்குளம் தொழில்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் கம்பெனிகளும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu