பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

August 25, 2022

பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில், சட்டப்பேரவை விதிகளில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நாட்களிலும் காலை உணவு வழங்குதலை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் இப்பணியை மேற்பார்வையிட வேண்டும். காலை உணவுத் திட்டத்தால் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் அடிப்படையில் மாணவர்களின் உடல் […]

பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

அதில், சட்டப்பேரவை விதிகளில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நாட்களிலும் காலை உணவு வழங்குதலை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் இப்பணியை மேற்பார்வையிட வேண்டும். காலை உணவுத் திட்டத்தால் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் அடிப்படையில் மாணவர்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு சுகாதாரமான உணவை வழங்குதலை உறுதி செய்தல் வேண்டும். மேலும், சுத்தமான சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம் மற்றும் சுவையை உறுதி செய்தல் வேண்டும்.

மாணவர்கள் தட்டு மற்றும் கைகளைச் சுத்தமாக கழுவுதல், மாணவர்களைச் சுத்தமான இடத்தில் அமர வைத்து பரிமாறுதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல் போன்றவற்றை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், உணவு பரிமாறுவதற்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுநெறிமுறைகளை, அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu