முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியாக சரிந்துள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கோடைகாலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக சரிந்து உள்ளது.