பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என போட்டியிட உள்ளனர். இதில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர் புகைப்படம் ஆகியவை ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள மைக்சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.