செவ்வாய்க்கிழமை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'செவ்வாயன்று நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது அமெரிக்காவின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்று கூறினார். தூய்மையான ஆற்றல் ஊக்கத்தொகையை அதிகரிப்பதற்கும், பாலங்கள் மற்றும் சாலைகளை மீண்டும் கட்டுவதற்கும் பிடன் வாக்குறுதிகள் அளித்துவருகிறார். இருப்பினும் குடியரசுக் கட்சியினர் அதிக பணவீக்கம், தொற்றுநோய்களுக்கு மத்தியில் குற்றங்களின் அதிகரிப்பு போன்றவற்றை சுட்டிக்காட்டி தற்போதைய நிர்வாகத்தை குறை கூறி வருகின்றனர்.
மறுபுறம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதிபர் தேர்தலுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், ஜார்ஜியா, பென்சில்வேனியா மற்றும் நெவாடாவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 2020 தேர்தலில் வாக்கெடுப்பு மோசடி நடைபெற்றதாக பொய் குற்றச்சாட்டுகளை டிரம்ப் முன்வைத்தார். இப்பொது அதேபோல் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிடன் எச்சரித்தார். ட்ரம்ப் பிடனுக்கு எதிராக கடுமையான கூறிக்கொண்டிருக்கும் வேளையில் போட்டேன் இத்தகைய பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதற்கிடையே பென்சில்வேனியாவில், கவர்னர் மற்றும் அமெரிக்க செனட் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிடனுடன் பிரச்சாரத்தில் இணைந்தார்.