அரிசோனா: உறைந்த ஏரியில் மூழ்கி, 3 அமெரிக்க இந்தியர்கள் பலி

December 30, 2022

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில், உறைந்த ஏரியின் மீது நடந்து சென்ற 3 அமெரிக்க இந்தியர்கள் பனிக்கட்டி உடைந்ததால், ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்த துயர சம்பவம் நேரந்துள்ளது. இதில் நாராயணா முத்தண்ணா, கோகுல் மெடிசிட்டி, ஹரிதா முத்தண்ணா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனதாக அறியப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர்களைத் தேடும் பணியில் கோகோனினோ கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முதலில் ஹரிதாவை கண்டுபிடித்தனர். ஆனால், […]

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில், உறைந்த ஏரியின் மீது நடந்து சென்ற 3 அமெரிக்க இந்தியர்கள் பனிக்கட்டி உடைந்ததால், ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்த துயர சம்பவம் நேரந்துள்ளது. இதில் நாராயணா முத்தண்ணா, கோகுல் மெடிசிட்டி, ஹரிதா முத்தண்ணா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனதாக அறியப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர்களைத் தேடும் பணியில் கோகோனினோ கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முதலில் ஹரிதாவை கண்டுபிடித்தனர். ஆனால், அவர் மீட்கப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரின் சடலங்கள் செவ்வாய் மதியம் கிடைத்ததாக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக, அவர்களது இந்திய உறவினர்களை தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu