டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் ஆட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியில், ஹரி நிஷாந்த் (83 ரன்), சன்னி சந்து (45 ரன்) இணைந்து 93 ரன்கள் கூட்டாண்மை அமைத்தனர். இறுதியில் சேலம் அணி 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ராஜ்குமார் (59 ரன்) மற்றும் ஜெகதீசன் கவுசிக் (62 ரன்) மட்டுமே நின்று விளையாடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கவுசிக் ஆட்டமிழந்ததால், திருச்சி 172 ரன்கள் எடுத்தது. சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.