பணியிட மாற்றம் மற்றும் நியமனத்துக்கான முக்கிய நாள்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றக் கலந்தாய்வு ஜூலை 2 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வுக்காக 30,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.














