கடந்த 1912-ல் மூழ்கிய டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலில் 12,500 அடி ஆழத்தில் 112 ஆண்டுகளாக சிதைந்து வருகிறது. ஆழ்கடல் சூழல், கடலின் அழுத்தம், நீரோட்டங்கள் மற்றும் இரும்பை உடைக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை தொடர்ந்து டைட்டானிக்கின் பாகங்களை சிதைத்து வருகின்றன.
ஆழ்கடலில் உள்ள உயிரி படலம் (biofilm) மற்றும் பாக்டீரியாக்கள் டைட்டானிக் சிதைவிற்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 'ஹாலோமோனாஸ் டைட்டானிகே' (Halomonas Titanicae) என்ற பாக்டீரியா, இரும்பை உடைக்க வல்ல திறன் கொண்டது. இது, கப்பலின் அழிவை வேகமாக்குவது தெரிய வந்துள்ளது. விஞ்ஞானிகளின் தொடர் ஆய்வுகளில், டைட்டானிக் கப்பல் ஒரு நாளில் 0.13 முதல் 0.2 டன் இரும்பை இழப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், டைட்டானிக் கப்பலின் முன்புறம் 280-420 ஆண்டுகளில் முற்றிலும் கரைந்து விடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.