இந்திய அளவில் தமிழகத்திற்கு உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக உறுப்பு கொடை தினத்தை ஒட்டி விருது வழங்கி கவுரவித்தனர்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மருத்துவத்துறையும் பல வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. இதில் உறுப்பு தானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, விழிப்புணர்வு என அனைத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. டெல்லியில் நடைபெற்ற 13 நாள் தேசிய உறுப்பு கொடை தினத்தை ஒட்டி தமிழகத்திற்கு உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக விருது வழங்கி கவுரவித்துள்ளனர். இதனை மத்திய சுகாதார மந்திரி மன்சூர் பாண்டியாவிடமிருந்து மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.