தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி 20 மாவட்டங்களில் தமிழக அரசின் சிறுதானிய இயக்கம் விரிவு படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் உணவு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான வலிமை மிக்க சிறுதானியங்கள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி கலந்து கொண்டார். அதில் சிறுதானிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் அங்கு, சிறுதானியங்கள் பயிரிட தமிழக அரசு 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், சிறுதானிய இயக்கம் 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாகவும், மானிய விலையில் சிறுதானியங்கள் விநியோகப் படும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாய நிலங்களில் பயிர் பன்முகத்தன்மை உறுதி செய்யும் முறையில் தரிசு நிலத்தை சிறுதானிய சாகுபயிடின் கீழ் கொண்டு வர ஊக்கத்தொகை வழங்குவதாக கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன், நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சித் துறை பேராசிரியர் ரூத் டிஃபிரைஸ், ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் இந்திய இயக்குனர் எலிசபெத் ஃபாரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
[














