மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் சரி பார்க்கும் பணி ஆறாம் தேதி தொடக்கம்

August 2, 2023

மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி சென்னையில் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள 102 வார்டுகளுக்கு 724 ரேஷன் கடைகளில் 5ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்று விண்ணப்பங்கள் வழங்கப்படும் பணி நடைபெற உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான விவரம் சரிபார்க்கும் […]

மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி சென்னையில் ஆறாம் தேதி தொடங்க உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள 102 வார்டுகளுக்கு 724 ரேஷன் கடைகளில் 5ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்று விண்ணப்பங்கள் வழங்கப்படும் பணி நடைபெற உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான விவரம் சரிபார்க்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது. அதன்படி படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியா? வேறு ஏதேனும் உதவித்தொகை வாங்குகின்றார்களா? குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளார்களா? போன்ற விவரங்களை சரி பார்க்கும் பணி 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் 100% சரி பார்த்து கள ஆய்வு நடத்திய பிறகு தான் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை மாதம், மாதம் வங்கி கணக்கில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமலும் குடும்ப தலைவிகள் தவறான தகவல்களை கொடுத்து உதவி பெறுவதை தடுக்கவும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு மிக தீவிரமாக நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu