தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப் 1,குரூப் 2,2 ஏ குரூப் 4 என பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு அட்டவணை ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வரும். தற்போது அடுத்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வரும் 15-ம் தேதி திசம்பர் மாதம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி என் பி எஸ் சி மூலம் 15000 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.