தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 7-ம் தேதி நடைபெற்றது. பில் கலெக்டர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்பும் நோக்கில் 20 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு, 7,247 மையங்களில் நடைபெற்றது, இதில் 15.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.