மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெறுவதற்கு ஜனவரி 3ம் தேதி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூபாய் 6000 மற்றும் பிற பகுதிகளுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இதற்காக நிதி ரூபாய் 220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், தற்காலிகமாக தங்கி இருந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை கடைசி தேதி என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.