தென்காசியில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சீரானதை தொடர்ந்து சுற்றுலா பகுதிகள் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த மாத தொடக்கத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல்
திருவிழா நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது.