உக்ரைன் போர் தொடரும் நிலையில், ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு செயல்பட்டுவரும் நிலையில், ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு தலைவர் மார்க் ருட்டே கூறியுள்ளார். இல்லையெனில் 100% பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்தியா தனது மக்களின் எரிசக்தி தேவையை முன்னுரிமையாகக் கருதுகிறது; சந்தை நிலை மற்றும் உலக அரசியல் சூழ்நிலையைக் கணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், இரட்டை நிலைப்பாடு இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.