தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் அதிகமான தொழிலாளர்களை வேகமாக வந்த லாரி மோதியது.
அரியானா மாநில நூஹ் மாவட்டத்தின் இப்ராகிம் பஸ் கிராமத்திலுள்ள டெல்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 மணியளவில் துயர சம்பவம் நிகழ்ந்தது.நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் அதிகமான தொழிலாளர்களை வேகமாக வந்த லாரி மோதியது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 4 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














