திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்ஜின் கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நின்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சேலம் அடுத்த தென்னப்பட்டி அருகே பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நின்றது. இதனால் அந்த ரயிலில் வந்த பயணிகள் வேறு ரயிலில் செல்ல முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்து வந்தனர். உடனடியாக ரயில் என்ஜின் டிரைவர் சேலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவிப்பு தெரிவித்து பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி சரி செய்தனர். இதனை அடுத்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. இதனால் மங்களூர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.