தமிழ் மொழியை ஆட்சிமொழியாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பல முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வழங்கிட மற்றும் வழக்கறிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற் கட்டமாக மூன்று கோடி ரூபாயும் பின்னர் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வழங்க உள்ளனர்.தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரவேண்டும் எனும் நோக்கத்தில் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ் பிரிவு மூலமாக தமிழ் சட்ட சொற்களஞ்சியம் அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றிய சட்டங்கள் அவசர சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழி பெயர்த்தல் போன்ற பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.