தொலைபேசி அழைப்புகளின் போது அழைப்பாளர்களின் பெயரும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கும் டிராய் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நெட்வொர்க் நிறுவனங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும்பொழுது அதில் பெயர்கள் இல்லாமால் எண்கள் மட்டுமே வரும். இதனால் ட்ரு காலர் என்ற செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் புதிய நம்பரில் இருந்த அழைப்புகள் வந்தால் அதனுடன் பெயரும் சேர்ந்து காண்பிக்கும். இது பெரிய உதவியாக இருப்பதால் பயனாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொலைபேசி அழைப்புகளின் போது அழைப்பாளர்கள் பெயரையும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என ட்ராய் அனைத்து நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.