காசாவில் ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் இது மேலும் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பின் அது இரண்டு நாட்களாக நீட்டிக்கப்பட்டது. நேற்று ஆறாவது நாளாக பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்கு பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது. ஒரு பிணை கைதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் என்ற விகித அடிப்படையில் இந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணியுடன் ஆறு நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது அப்படியே தொடரும் என்றும் மேலும் பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மத்தியஸ்தர்கள் தொடர்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதோடு காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதுவரை இந்த போரில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.